25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
மார்கழி மாத பிறப்பை முன்னிட்டு சஞ்சீவி மலையில் படி பூஜை விழா. >> ராஜபாளையம் 6-வது மைல் குடிநீர் தேக்கம் நிரம்பி, 2-வது குடிநீர் தேக்கத்துக்கும் தண்ணீரை சேமித்து வைக்கவும் நகராட்சி தலைவர் பவித்ரா ஷியாம், ஆணையாளர் நாகராஜன் உத்தரவு. பொதுமக்கள் மகிழ்ச்சி. >> பாரம்பரிய கொத்தலு திருவிழா, ராஜூக்கள் சமூகம் சார்பில்ராஜபாளையத்தில் விமர்சையாக கொண்டாடப்பட்டது. >> ராஜபாளையம் சர்வசமுத்திர அக்ரஹாரம் தெரு சந்தான வேணுகோபால சுவாமி கோயிலில் மகாதேவ அஷ்டமி. >> விருதுநகர் மாவட்டம், வத்திராயிருப்பு ஒன்றியத்திற்குட்பட்ட கோபாலபுரம் கிராமத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கான 10 நாட்கள் தொழில் முனைவோர் பயிற்சி முகாம். >> ராஜபாளையம் வேட்டை வெங்கடேச பெருமாள் கோயிலில் திருக்கல்யாண விழா. >> நீர்வரத்து அதிகரித்ததால், அய்யனார் கோயில் ஆற்றைக் கடந்து வழிபாட்டிற்கு செல்ல வனத்துறை தடை விதித்தனர். >> இராஜபாளையம் பீமா ஜூவல்லரி இராஜபாளையம் ஓராண்டை நிறைவு செய்கிறது. >> நீரின் ஆழம் குறித்து எச்சரிக்கை பலகை தேவை . >> அய்யனார் கோயில் ஆற்றில் கனமழையால் வெள்ளப்பெருக்கு.  >>


2025-26-ஆம்  ஆண்டு  தீவன அபிவிருத்தி  திட்டத்தின்  கீழ்,  மின்சாரத்தினால் இயங்கும் புல்வெட்டும் கருவிகள், தமிழக அரசினால் 50 சதவீத மானியத்தில், 50 பயனாளிகளுக்கு  மாவட்டத்தில் வழங்கப்படவுள்ளது. 
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

2025-26-ஆம் ஆண்டு தீவன அபிவிருத்தி திட்டத்தின் கீழ், மின்சாரத்தினால் இயங்கும் புல்வெட்டும் கருவிகள், தமிழக அரசினால் 50 சதவீத மானியத்தில், 50 பயனாளிகளுக்கு மாவட்டத்தில் வழங்கப்படவுள்ளது. 

கால்நடைகளின் உற்பத்தி திறனுக்கு தீவனம் மற்றும் பசுந்தீவனம் மிக முக்கியமாகும்.  பண்ணை  செலவினத்தில் 70  சதவீதம்  கால்நடைகளுக்கான தீவன செலவாகும். உற்பத்தி செலவினை குறைத்து, குறைந்த முதலீட்டில் அதிக லாபம் ஈட்டுவதற்கு , தீவனம் விரயம் ஆகுதலை குறைப்பது முக்கியமான ஒன்றாகும்.  கால்நடைகள் தீவனங்களை வீண் செய்வதை தவிர்க்க, தீவனங்களை  சிறு துண்டுகளாக  நறுக்கி  வழங்குவதற்கு,  2025-26-ஆம்  ஆண்டு  தீவன அபிவிருத்தி  திட்டத்தின்  கீழ்  மின்சாரத்தினால் இயங்கும் புல்வெட்டும் கருவிகள், தமிழக அரசினால் 50 சதவீத மானியத்தில், 50 பயனாளிகளுக்கு  விருதுநகர் மாவட்டத்தில் வழங்கப்படவுள்ளது.

இத்திட்டத்தில் பயன் பெறுவதற்கு, குறைந்த பட்சம் 2 கறவைப் பசுக்கள் வைத்திருக்க வேண்டும். மின்சார வசதி கொண்ட இறவையில் தீவன சாகுபடி செய்கூடிய வாறு, குறைந்த  பட்சம் ½ ஏக்கர் நிலம் வைத்திருக்க வேண்டும்.  கடந்த 10 ஆண்டுகளில் இதுபோன்ற திட்டங்களில் பயனாளியாக பயன்பெற்று இருத்தல் கூடாது.  சிறு குறு மற்றும் பெண் விவசாயிகள், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் விவசாயிகளுக்கு  முன்னுரிமை வழங்கப்படும்.இத்திட்டத்தில் பயன்பெற விரும்பும் விவசாயிகள் தங்களுக்கு அருகில் உள்ள கால்நடை மருந்தக, கால்நடை உதவி மருத்துவரை அணுகி  தங்களிடம் உள்ள கால்நடை விபரம், தீவன சாகுபடி விபரம், நில சர்வே எண் மற்றும் ஆதார் அட்டை நகலுடன் கூடிய விண்ணப்பத்தினை சமர்பித்து பயன்படுத்திக்கொள்ளலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,I A S., அவர்கள் தெரிவித்துள்ளார்.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News